உத்தரபிரதேசத்தின் ஆளும் கட்சியான சமாஜ்வாடியின் சார்பில் சுல்தான்பூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அருண் வர்மா. தற்போதைய சட்டமன்ற தேர்தலிலும் அவர் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு அருண் வர்மா சில நபர்களோடு சேர்ந்து தனது தொகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை கற்பழித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அந்த இளம்பெண் அருண் வர்மா உள்பட பலர் மீது போலீசில் புகார் அளித்தார்.
பின்னர் பல மாதங்களுக்கு பிறகு அந்த இளம்பெண் தனது புகாரை திரும்பப்பெற்றார். இருப்பினும் இந்த வழக்கில் சில இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், கடந்த 11-ந் தேதி அந்த இளம்பெண் திடீரென மாயமானார்.
இதையடுத்து நேற்று முன்தினம் ஜெய்சிங்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே அந்த இளம்பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாலைமலர்
இதையடுத்து நேற்று முன்தினம் ஜெய்சிங்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு அருகே அந்த இளம்பெண் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மாலைமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக