உச்சநீதிமன்றம் தீர்ப்பு எதிரொலி : சென்னை உட்பட தமிழகம் முழுவதும் போலீஸ் குவிப்பு!
By
Thangam
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகிறது.
இதனையடுத்து சென்னை மாநகரம் மற்றும் தமிழகம் முழுவதும் போலீசார் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் மட்டும் 15000க்கும் மேற்பட்ட போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேப்போல தமிழகத்தில் முக்கிய நகரங்களிலும் எந்த விதமான வன்முறையும் நடைபெறாமல் தடுப்பதற்காக அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக