சனி, 12 ஜூன், 2010

சத்யராஜ், ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பு, நடிகர்-நடிகைகள் ஒத்திகை பார்க்க வேண்டும்

ஒரு படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிப்பதற்கு முன்பு, நடிகர்-நடிகைகள் ஒத்திகை பார்க்க வேண்டும் என்று கமல்ஹாசன் சொன்னது, மிக நல்ல விஷயம்.

படத்தில் நடித்து முடித்து, அந்த படத்தை தியேட்டரில் பார்க்கும்போது, அடடா, இந்த காட்சியில் இப்படி நடித்து இருக்கலாமே... இந்த வசனத்தை இப்படி பேசியிருக்கலாமே... என்று எனக்குள் நானே பல முறை ஆதங்கப்பட்டுள்ளேன்.

'அமைதிப்படை' படத்திலேயே அது நடந்து இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல. எல்லா நடிகர்-நடிகைகளுக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வீட்டுக்குப்போய் வருத்தப்படுவதை விட, படப்பிடிப்புக்கு முன்பே ஒத்திகை பார்த்தால், பின்னால் வருத்தப்படுவதை தவிர்க்கலாம்...

நடிகர் - நடிகைகள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர்கள், இயக்குநர்கள், ஸ்க்ரிப்ட் எழுதுபவர்கள் ஆகிய அனைவருமே ஒருமுறை ஒத்திகை பார்ப்பது நல்லது. ஒரு படத்துக்கு, குறைந்தபட்சம் ஒரு வாரம் ஒத்திகை பார்த்தால் போதும். படம் நன்றாக வரும். 4 வாரம் ஓடுகிற படம் 50 நாட்கள் ஓடும். 100 நாட்கள் ஓடுகிற படம், 25 வாரங்கள் ஓடும்...'', என்றார்.
பதிவு செய்தவர்: பாலன்கமல்
பதிவு செய்தது: 12 Jun 2010 6:51 pm
கமல் அற்புதமான நடிகர், அவருக்கு வந்த அறிவு இப்ப உள்ள பிசிணறி கமினடி நடிகருக்கு வரணும்,அப்பவாச்சும் தொடற்சியா தோல்வி படங்கள் குடுக்காமல் இருப்பானுங்க,இவங்க என்ன பண்ணினாலும் ரசிகரதுக்கு காதுல பூ வேச்சவனுங்க இருக்கலாம் ஆனால் முக்கால் வாசி ரசிகர்கள் குடுத்த காசுக்கு நல்ல பெர்போமன்சே தான் எதிர் பார்கிறார்கள்

பதிவு செய்தவர்: ஏழுமலை
பதிவு செய்தது: 12 Jun 2010 6:09 pm
மொதல்ல நல்ல கதை எழுதறதுக்கு ஒத்திகை பாருங்க.


கருத்துகள் இல்லை: