திங்கள், 7 ஜூன், 2010

தூக்கிலிடமுடியும,் கோத்தபாய ராஜபக்ஷ, போர்க்குற்றங்கள் குறித்து சரத் பொன்சேகா

இராணுவத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகாவைத் தூக்கிலிடமுடியும் என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரி வித்துள்ளார். இங்கிலாந்தின் பி.பி.சி தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான கார்ட் ரோக் நிகழ்சிச்சியில் கலந்து கொண்ட இவர் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
போர்க்குற்றங்கள் தொடர்பில் சரத் பொன்சேக்கா வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் செய்தியாளர் கேள்விகளைக் கேட்ட போது ஆத்திரமடைந்த கோத்தபாய ராஜபக்ஷ போர்க்குற்றங்கள் குறித்து சரத் பொன்சேகா தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் தேசத் துரோகம் செய்கின்றார். அவரைத் தூக்கிலிட வேண்டும் என கோபமாகத் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

கருத்துகள் இல்லை: