செவ்வாய், 8 ஜூன், 2010

3 மாணவிகள் மதுவருந்திவிட்டு போதையில் படுத்துறங்கிய சம்பவம

அனுராதபுரத்திலுள்ள முன்னணி அரச பாடசாலையொன்றில் 11 வயதுடைய 3 மாணவிகள் மதுவருந்திவிட்டு போதையில் படுத்துறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் படுத்துறங்கிய மாணவிகளை கண்ட ஆசிரியை அவர்கள் திடீரென நோயுற்றுளார்களா என வினவியபோது அவர்கள் வகுப்பறையில் மதுபாணம் அருந்திவிட்டு போதையேறி தூங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் அருந்திய மதுப்போத்தலில் அரைபோத்தல் மிகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: