வியாழன், 10 ஜூன், 2010

இலங்கை அமைச்சர்கள் குருவாயூரில் தரிசனம்

இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் உட்பட அமைச்சர்கள், குருவாயூரில் சுவாமி தரிசனம் செய்தனர். அவர்களில் பெரும்பாலானோரது பெயர்களை தெரிவிக்க, தேவஸ்வம் போர்டு அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இலங்கை கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்த், வேளாண்மை அமைச்சர் நவரத்தினராஜா, பிரதிநிதிகள் சபை தலைவர் காந்தரூப் ஆகியோருடன் பத்து பேர் கொண்ட பிரதிநிதிகள், குருவாயூர் கோவிலுக்கு சென்றனர். அவர்கள் அனைவரும் கடந்த 7ஆம் தேதி இரவு இராக்கால பூஜை (அத்தாழ பூஜை) நேரத்தில் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
அவர்களது பெயர்களை தெரிவிக்கவோ, அவர்கள் என்னென்ன வேண்டுதல்களை நிறைவேற்றினர் என்பது குறித்தான விவரங்களையோ தேவஸ்வம் போர்டு வெளியிட மறுத்து விட்டது.

கருத்துகள் இல்லை: