வெள்ளி, 11 ஜூன், 2010

மதுபோதையில் வாகனம் ஓடி ஒருவரின் மரணத்திற்கு காரணமானவர் கொலை பற்றி

ஸ்ரீரங்காவை அம்பலப்படுத்தினார் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள்!

இன்றைய தினம் (11) ஆயுதங்களை பதிவு செய்வது தொடர்பான தனி நபர் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய சில்வெஸ்த்திரி அலென்ரின் உதயன் அவர்கள் மேற்படி விவாதம் தொடர்பாக எமது இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா ஆதாரமற்ற முறையில் அமைச்ர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மீதும் ஈ.பி.டி.பி. மீதும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் மேற்படி விவாதத்தில் உரையாற்றினார். ஆகவே இந்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா யார் என்பதையும் கடந்த கால ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் எனது பாராளுமன்ற உரையில் இதை அம்பலப்படுத்தியிருந்தேன்.

அவரது பாராளுமன்ற உரையில் தெரிவித்துள்ளதாவது புலிகளின் ஆயுத அட்டூழியம் இருந்த  காலத்தில் புலிகளின் கொலைக்கார தளபதி பொட்டம்மானுடன் இரகசிய உறவு வைத்து பல ஜனநாயகவாதிகளின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்கள் எல்லாம் இன்று ஜனநாயகம் பற்றியும் இயல்பு வாழ்க்கை பற்றியும் பேசுகின்றார்கள். மதுபோதையில் வாகனம் ஓடி ஒருவரின் மரணத்திற்கு காரணமானவர் கொலை பற்றி இங்கு பேசுகிறார்.

எம்மைப் பொறுத்தவரையில் வடக்குக் கிழக்கில் ஜனநாயகம் மலர ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் பல தியாங்களைச் செய்திருக்கின்றோம்.  250க்கு மேற்பட்ட எமது கட்சி உறுப்பினர்களை நாம் இயல்பு வாழ்வு மீட்புக்காக புலிகளிடம் பலி கொடுத்திருகின்றோம.;  எமது இரத்தத்தால் உருவாக்கப்பட்ட இயல்பு நிலையை நாம் வடக்கில் பாதுகாப்போமே தவிர  அதற்கு இடையூறாக இருக்கமாட்டோம். வெறும் அரசியலுக்காக எம் மீது குற்றம்;சாட்டுவோர் மீது எமக்கு அக்கறையில்லை.

நேற்றைய எனது உரையில் இத் தீயசக்திகளின் பின்னணிபற்றி தெரிவுபடுத்தியுள்ளேன். வடக்கில் இயல்பு நிலை இல்லை என்றதொரு தோற்றப்பாட்டை சர்வதேசத்திற்கு காட்டவே இவ்வாறான  சக்திகள் வெளிநாட்டில் உள்ள புலிகளிடம் பணம் பெற்று இங்கு விஷமத்தனமான வதந்திகளைப் பரப்புகின்றனர்.  வடக்கு கிழக்கிலுள்ள பாதுகாப்பு தரப்பினருக்கு சகல அதிகாரங்களும் உண்டு அங்கு யாராவது சட்டவிரோத ஆயுதம் வைத்திருந்தால் அதைக் களைய வேண்டும் என நான் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்துகின்றேன்.

வடக்கிலே மக்களை சுரண்டி வர்த்தகம் நடத்தியவர்கள் எல்லாம் இன்று தமிழ் மக்கள் பற்றி பேசுகின்றார்கள். அரசியல் என்று சொல்லிக்கொண்டு வியாபாரம் நடத்தியவர்கள் வெற்றிலை உருளைக்கிழங்குஇ மண்ணெண்ணை  என்று மக்களுக்கு அறாவிலையில் விற்று மக்களை ஏமாற்றியவர்கள் எல்லாம் இன்று தமிழ் மக்களை பற்றி பேசுகின்றார்கள் என்று சில்வெஸ்திரி அலென்ரின் உதயன் அவர்கள் தெரிவித்தார்.       

கருத்துகள் இல்லை: