வியாழன், 31 ஜனவரி, 2019

பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது: பொன்னையன் பரபரப்பு பேட்டி

தினகரன் : சென்னை:
பாஜகவுடன் அதிமுக ஒருபோதும் கூட்டணி அமைக்காது என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியும் கூட்டணி குறித்து வியூகம் வகுத்து வருகின்றன. கூட்டணி குறித்த அரசல்புரசலாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்காமலும், மறுப்பு தெரிவிப்பிக்காமலும் இரு கட்சி தலைவர்களும் மழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில் பாஜகவுடன்  ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் கூறியதாவது: 5 ஆண்டுக்கு முன்னர் இருந்த பாஜக தற்போதுள்ள இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் மத்தியில் ஆளும் பாஜக தமிழகத்திற்கு நல்லது செய்ததைவிட தீங்குதான் அதிகம் செய்துள்ளது. அப்படி இருக்கையில் அவர்களுடன் கூட்டணி வைப்பது சரிவராது. இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என பொன்னையன் கூறினார். இது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: