வெள்ளி, 1 பிப்ரவரி, 2019

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை இல்லை: தமிழக அரசு!

tamil.news18.co :கடந்த 29-ம் தேதி மாலையில் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், 30-ம் தேதி காலை வரை பணியில் சேரவில்லை.
ஜாக்டோ- ஜியோ வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்று, கடந்த 30-ம் தேதி பணிக்கு வராத 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழகத்தின் பெரும்பாலான அரசு பள்ளிகளின் பணிகள் ஸ்தம்பித்தன. ஜாக்டோ ஜியோ அமைப்பின் 9 அம்ச கோரிக்கைகள் இதுதான்!
இந்தநிலையில் கடந்த 29-ம் தேதி மாலையில் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அதனையும் பொருட்படுத்தாமல் 3500 தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், 30-ம் தேதி காலை வரை பணியில் சேரவில்லை. அவர்கள் மீது 17பி பிரிவின் கீழ் நோட்டிஸ் அனுப்பி விசாரணை நடத்தப்படும் என கூறப்பட்டுவந்தநிலையில், அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படாது என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: