சனி, 10 நவம்பர், 2012

மதிமுகாவில் ஜனநாயகமே கிடையாது ஜால்ராக்கள் மட்டுமே

 வைகோ, நாஞ்சில் சம்பத் பற்றி சங்கொலியில் மறைமுகமாக கொடுத்த சிக்னல்
ம.தி.மு.க.வில் இருந்து நாஞ்சில் சம்பத்துக்கு வெளிப்படையாக அறிவிக்கப்படாமல் ‘கட்டம் கட்டப்பட்டு’ விட்டது என்கிறார்கள். வைகோவே சங்கொலியில் மறைமுகமாக நாஞ்சில் சம்பத் பற்றி எழுதி, தொண்டர்களுக்கு சிக்னல் கொடுத்து விட்டார் என்றும் அக்கட்சியில் கூறுகிறார்கள்.
சங்கொலியில் வைகோ, ‘உதட்டில் தேனும் உள்ளத்தில் நஞ்சும் கொண்டோர், தீரன் சின்னமலையைப் பற்றி நான் பேசியதை, வெட்டிவேலை என்று ஏளனம் செய்தனராம். அவர்கள், நரித்தனமும் பொல்லாங்கும் வஞ்சகமும் கொண்ட குடில மனம் கொண்டோர். ஐயோ பாவம்! அவர்களுக்கு என் அனுதாபங்கள்!’ என்று எழுதிய வரிகள் யாரை குறிக்கும் என்பதில் ம.தி.மு.க.-வுக்குள் ரகசியம் ஏதுமில்லை.
தீரன் சின்னமலையைப் பற்றி கரூர் மாநாட்டில் வைகோ பேசியது பற்றி சம்பத் கமென்ட் அடித்ததற்கு பதிலடி இது. கட்சிக்காரர்கள் இந்த சிக்னலை நன்றாகவே புரிந்துகொண்டு சம்பத்தை ஒதுக்குவதால், அவராகவே கட்சியில் இருந்து கழன்று கொள்வார் என்று வைகோ நினைக்கிறார் என்கிறார்கள்.  http://viruvirupu.com/ 
மதிமுகாவில் ஜனநாயகமே கிடையாது ஜால்ராக்களை மட்டுமே வைகோவிற்கு பிடிக்கும் இந்த சர்வாதிகார வியாதி அவருக்கு அனேகமாக மிருகங்களில் இருந்து பரவி  இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்
சம்பத்தோ, இவர்களாக வெளியேற்றட்டும் என்று வெயிட் பண்ணுகிறாராம்!
அதுவரை இருதரப்பும் வார்த்தை விளையாட்டு நடத்தும்
சி.பி.எஸ்.இ., ஒன்பதாம் வகுப்பு, சமூக அறிவியல் பாடத்தில், ஒரு சமுதாயம் பற்றிய கருத்துக்களால் சர்ச்சைக்கு ஏற்பட்டுள்ளது. "இப்பாடத்தை நீக்க வேண்டும்' என, ம.தி.மு.க., சார்பில் நாகர்கோவிலில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வைகோவுக்கும், கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்துக்கும் கருத்து வேறுபாடு வலுத்து வரும் நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. அதற்கு முன், சம்பத்தின் சொந்த ஊரான வேர்கிளம்பியில், அவரது உருவ பொம்மையை, ம.தி.மு.க., வினர் எரித்தனர். இதுகுறித்து நாஞ்சில் சம்பத், ‘’சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுவதற்காக, இந்த நாடகம் நடத்தியுள்ளனர். இதன் மூலம் யாருக்காவது மகிழ்ச்சி கிடைத்தால், எனக்கும் மகிழ்ச்சிதான். புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். ம.தி.மு.க., வில் கொள்கை பிடிப்புடன் இருந்ததால், முதலில் கைது செய்யப்பட்டேன். நிர்வாகத்தில் தலையிட்டதில்லை; சிபாரிசு செய்தததில்லை. சொந்த ஊர் செல்வாக்கு பற்றி கலிங்கப்பட்டியில் விசாரித்தால் தெரியும். அரசியலில் இல்லாமலும் என்னால் சுடர் விடமுடியும்.>எனது இல்ல திருமணத்துக்கு வருமாறு, நான் வைகோவை நேரில் அழைத்திருந்தேன். இந்த நிலைமைக்கு பின், அவர் திருமண விழாவில் பங்கேற்க வேண்டாம் என, வேண்டுகோள் விடுக்கிறேன்’’என்று கூறினார்.  மதிமுகாவில் ஜனநாயகமே கிடையாது ஜால்ராக்களை மட்டுமே வைகோவிற்கு பிடிக்கும் இந்த சர்வாதிகார வியாதி அவருக்கு அனேகமாக மிருகங்களில் இருந்து தோற்றி இருக்கலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் நம்புகின்றனர் 

கருத்துகள் இல்லை: