வியாழன், 5 ஜனவரி, 2017

ராம மோகன ராவ் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார்? விஜய் மல்லியா பாணியில்?

முன்னாள் தலைமைச்செயலர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியதும் அதைத் தொடர்ந்து மோகன ராவ் மருத்துவமனையில் போய் அட்மிட் ஆனதும் அனைவருக்கும் தெரியும். இரண்டே நாட்களில் வெளியே வந்து மீடியாக்கள் முன்பாக கர்ஜித்ததும் உலகமே பார்த்து மிரண்டது. அதன் பின் அவரது வீட்டிற்குப் போனார். அதோடு சரி. அதன் பின் என்ன ஆனார்? எங்கே போனார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒரு புலானய்வு வார இதழ் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்த அன்றே வெளிநாடு போய் விட்டார். அனேகமாக அவரின் மகன் செட்டில் ஆகி இருக்கும் துபாய் போய் இருப்பார் என்றும், அங்கிருந்து வசதியாக எதாவது ஒரு நாட்டில், அதாவது நார்வே போன்ற பாதுகாப்பான ஒரு தேசத்தில்போய் செட்டில் ஆகி இருப்பார் என்கிறது அந்தப் பத்திரிக்கை. விஜய் மல்லையாவை தப்பவிட்டு விட்டு இப்போது புலம்பிக்கொண்டிருக்கிறோம். அடுத்ததாக இவரைப்போய் எங்கு தேடப்போகிறோமோ..?? லைவ்டே

கருத்துகள் இல்லை: