சனி, 7 ஜனவரி, 2017

குத்துச்சண்டை.. 9 ஆம் வகுப்பு மாணவி பலி! கடும் வெயிலில் நடந்த போட்டி! தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் 14 வயதுக்குட்பட்டோருக்கான குத்துச் சண்டை போட்டிகள் நடைபெற்றன. இதில் சோரீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவி மாரீஸ்வரி கலந்து கொண்டார். போட்டியின் போது அளிக்கப்படும் 30 வினாடி ஓய்வின் போது மாரீஸ்வரி மயங்கி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.< கடும் வெயிலில் போட்டி நடந்ததால் அதிக களைப்பின் காரணமாக அந்த மாணவி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. போட்டிக்கு முன்பு நல்ல உடல் தகுதியுடன் அவர் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைவ்டே

கருத்துகள் இல்லை: