திங்கள், 2 ஜனவரி, 2017

நீதிகட்சி விழா... எல்லா பெரியார் கழகங்களையும் ஒரே மேடையில் ? வீரமணியின் சசி ஆதரவுக்கு திமுக பதிலடி?

"4-ந் தேதி தி.மு.க.வின் பொதுக்குழு கூடுதே.. அங்கே என்ன காய்
நகர்த்தப்படுதாம்? அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளராக்கியது போல், தி.,மு.க. பொதுக்குழுவிலும் ஸ்டாலினுக்கு செயல்தலைவர் பொறுப்பு கிடைக்குங்கிற டாக் இருக்கு. கலைஞரை ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கோபாலபுரத்தில் தனித்தனியா சந்திச்சி, நலம் விசாரிச்சிருக்காங்க. கலைஞருக்கு பூரண ஓய்வு தேவைன்னு மருத்துவமனை அறிவுறுத்தியதால், அப்பாயிண்ட்மென்ட் கேட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட யாருக்கும் நேரம் ஒதுக்கித் தரலை.
இந்த நிலையில் தந்தை பெரியார் திரா விடர் கழம், பெரியார் திராவிடர் கழகம் அமைப் பினரை கோபாலபுரத்துக்கு அழைக்கலாமாங்கிற டிஸ்கஷன் அறிவாலயத்தில் நடந்திருக்குது.'
பெரியார் அமைப்பினர் மட்டும் ஏன்? அவங்களும் கலைஞரை நலன் விசாரிக்க விரும்பியவங்கதான். ஆனா அவங்களை அழைக்க லாமான்னு ஆலோசிக்கப்பட்டதுக்கு காரணம் வேற.. அ.தி.மு.க. பொதுச்செயலாளரா சசிகலா வை வரவேற்று, தி.க. தலைவர் வீரமணி கொடுத்த அறிக்கை தி.மு.க. நிர்வாகிகள் மத்தியில் பல விவாதங்களை உருவாக்கியிருக்கு.


தி.க. தரப்பிலோ, "தமிழகத்தில் பா.ஜ.க. மறைமுகமா பிராமண ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறதாலதான் அதைத் தடுக்கும் வகையில் சசிகலா தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு எங்க தலைவர் ஆதரவு தர்றார்'னு சொல்றாங்க. தி.மு.க. நிர்வாகிகள் தரப்பிலோ, "அ.தி.மு.க.வை வழிநடத்துறது யாருங்கிறதில் தி.க.வுக்கு அதன் கொள்கைரீதியான பார்வை இருக்கலாம். ஆனால் அதற்காக அவர், சசிகலாவை சர்வபரித் தியாகம் செய்தவர்ங்கிற மாதிரி பாராட்டுவதை ஏற்க முடியலை. இது போன்ற பாராட்டெல்லாம், அரசியல் களத்தில்  தி.மு.க.வுக்கு எதிராத்தானே போகும். பெரியார் கொள்கைகளை நிறைவேற்றுவதில் தி.மு.க.வுக் கும் அ.தி.மு.க.வுக்கும் உள்ள வித்தியாசம் தாய்க் கழகத்துக்கு தெரியாதா'ன்னு கேட்குறாங்க.'

"பெரியாரால் உருவாக்கப்பட்ட இயக்கத் தையும், அதிலிருந்து பிரிந்து சென்று பெரியார் பெயரில் இயக்கங்களை நடத்துறவங்களையும் ஒரே தராசில் எடை போட்டால், அதை ஆசிரியர் வீரமணி ஏற்று ஒத்துழைப்பு தருவாராங்கிறதுதான் தி.மு.க தரப்பின் கேள்வி.
அதனால்தான் பெரியார் பெயரிலான மற்ற இயக்கத்தினர் பற்றி ஆலோசிச்சதோடு, அந்த அமைப் பின் தலைவர்களை மேடையேற்றி தி.மு.க சார்பில் நீதிக் கட்சி நூற்றாண்டு கருத்தரங்கு நடத்தவும் ஏற்பாடு நடந் திருக்குது.
தி.க. தலைமையும் தி.மு.க மேலிடமும் நேரடியா சந்தித்துப் பேசும்போதுதான் தாய்க்கழக நிலைப்பாடு தொடர்பான தீர்வு ஏற்படும்னு சொல்றாங்க.''’  நக்கீரன்

கருத்துகள் இல்லை: