புதன், 13 அக்டோபர், 2010

கமல் இயக்கத்தில் சூர்யா, மோகன் லால் !

  உலக சினிமாக்கள் வியக்கும் வகையில் ‘தசாவதாரம்’ படத்தை கொடுத்த கமலஹாசன் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி தற்போது காமெடி கலந்த காதல் கதையாக ‘மன்மதன் அம்பு’ படத்தை எடுத்து முடித்துள்ளது.  ‘மன்மதன் அம்பு’ விரைவில் வெளிவரவிருக்கும் நிலையில் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் கமல்.


 
இந்தப் படத்தை கமலே இயக்கப்போவதாகவும்,  இதில் தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கவிருப்பதாகவும் திரைவட்டாரத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. 

இந்த படத்தில் சூர்யா, மோகன் லால், ரவிதேஜா ஆகியோருடன் கமலஹாசனும் நடிக்க இருக்கிறாராம்.  நாயகிகளாக நடிக்க இருப்பவர்கள் திரிஷா, ஜெனிலியா, தீபிகா படுகோனே. 

சூர்யா ஏற்கனவே பிரண்ட்ஸ், பிதாமகன், ஆய்த எழுத்து போனற பல ஹீரோக்கள் கதைப் படங்களில் நடித்திருக்கிறார்.  இப்போதுகூட விவேக் ஓபராயுடன் ‘ரத்தச் சரித்திரம்’ படத்தில் நடித்துள்ளார். இப்போது கமல், மோகன் லால், ரவிதேஜாவுடன் சேர்ந்து நடிக்கவிருப்பதாக கூறபடுகிறது.   

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவர இருக்கிறதாம்.

ஹாலிவுட், பாலிவுட்டில் முன்னணி நடிகர்கள் சேர்ந்து நடிப்பது சகஜமான ஒன்று.  மலையாள திரையுலகில்கூட மம்முட்டி, மோகன் லால் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் சேர்ந்து நடித்து வருகிறார்கள். ஆனால் தமிழில் இது மிகமிக அரிதான ஒன்றாகும். 

கமலின் இந்தப் படம் எடுக்கப்படும் பட்சத்தில், தமிழ் திரையுலகிலும் பலஹீரோ கதை கொண்ட படங்கள் பல உருவாக வழிவகுக்கும் என்பது சந்தோஷமான விஷயமே.

கருத்துகள் இல்லை: