திங்கள், 23 ஜனவரி, 2017

இப்போது தான் ஆட்டமே தொடங்குகிறது. .. எந்த சட்டமும் நீதித்துறையின் மேலாய்வுக்கு உட்பட்டதே ! கிருபா முனுசாமி

ஜல்லிக்கட்டு அவசர சட்டத்தை யாரும் தடை செய்ய முடியாது என்று தற்போது ஊடக கூட்டத்தில் ராஜசேகரன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அவசர சட்டமோ, நிரந்தர சட்டமோ, எப்பேர்ப்பட்ட சட்டமாக இருந்தாலும் அது நீதித்துறையின் மேலாய்வுக்கு (Judicial Review) உட்பட்டதே! யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எந்த சட்டத்தையும் எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். இது மாணவர்கள் தன்னெழுச்சி போராட்டம், யாரும் குறை கூறாதீர்கள், ஏன் அரசியல் புரிதல் வேண்டுமென்றெல்லாம் பேசிய தமிழர்களே, "இப்போது தான் ஆட்டமே தொடங்குகிறது. மாணவர்கள் தங்கள் போராட்டத்தில் உறுதியாக இருக்கிறார்களா இல்லையா என்பது இனி தெரிந்துவிடும்". அடுத்ததை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்!  முகநூல் பதிவு  கிருபா முனுசாமி

கருத்துகள் இல்லை: