திங்கள், 23 ஜனவரி, 2017

மாணவர்கள் முடியை பிடித்து இழுத்து பந்தாடும் கோவை போலீசார்


சென்னை மெரீனா கடற்கரையைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குண்டுகட்டாக தூக்கி எரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கோவை வ.உ.சி மைதானத்தின் போராட்டக்களத்தில் தற்போது போலீசார் மிரட்டி, அவர்களின் தலைமுடியை பிடித்து இழுத்து பந்தைப்போல் தூக்கி எரிந்துவருகின்றனர். இந்த சம்பவத்தால் மாணவர்களும் இளைஞர்களும் அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் இழுத்துபிடித்துக்கொண்டு போராட்டத்திலிருந்து வர மறுத்துவருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை தற்போது மீடியாக்களில் லைவ்வாக சென்றுகொண்டிருப்பதால் கோவை பொதுமக்களிடையே போலீசார் மீது அதிருப்பதியை வெளிப்படுத்திவருகின்றனர். லைவ்டே

கருத்துகள் இல்லை: