திங்கள், 12 செப்டம்பர், 2011

யாழ். குடாநாட்டில் முற்றாக பாதுகாப்பு வலயங்கள் நீக்கம் - கட்டளை தளபதி ஹத்துருசிங்க


யாழ். குடாநாட்டுக்கான சகல அதிஉயர் பாதுகாப்பு வலயங்களும் நீக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தின் யாழ் குடாநாட்டுக்கான கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். அதிஉயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களில், மோதல்களின் போது இடம்பெயர்ந்திருந்த வர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். இருந்த போதிலும் பலாலி விமான நிலைய பாதுகாப்புக்கென அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம் பிரதேசத்தில் மாத்திரமே மக்கள் மீளக் குடியமர்த்தப்படாதுள்ளனர். இவர்களுக்கு நஷ்ட்டஈடு வழங்கி மாற்று இடங்களில் மீளக்குடியமர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். இது விடயமாக நீதி அமைச்சினூடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மேஜர் ஜெனரல் ஹத்துரு சிங்க சுட்டிக் காட்டினார்.

கருத்துகள் இல்லை: