ஞாயிறு, 28 ஜனவரி, 2018

கருகிய பயிரை கண்டு மாரடைப்பால் விவசாயி மரணம்!


நக்கீரன் :திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டாபுரம் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி மகன் ராதா(60). இவர் அருகில் உள்ள இஞ்சடிகோட்டகத்தில் உள்ள தனது வயலில் 2 ஏக்கர் சம்பா சாகுபடி செய்துள்ளார். கடும் வறட்சி, மழை ஏமாற்றத்தினால் இரண்டு முறை விதைத்த விதைகள் வீணாகிப் போனது. மூன்றாவது முறையாக விதைத்த நெல் பயிரும் காவிரியில் தண்ணீர் வராததால் தற்பொழுது வளர்ந்து கதிர் வரும் நிலைக்கு வரும் நிலையில் தண்ணீர் இல்லாததால் வளர்ந்த பயிர் கருக தொடங்கியது.>கருகும் பயிரைக் கண்டு தினம் தினம் விவசாயி ராதா வேதனை பட்டு வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம் போல் இன்றும் வயலுக்கு சென்ற விவசாயி ராதா, பயிரை பார்த்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்து மரணம் அடைந்துள்ளார். உடன் உறவினர்கள் மற்றும் அப்பகுதியினர் விவசாயி ராதாவின் உடலை மீட்டு அவரது வீட்டிற்கு கொண்டு வந்தனர். இறந்த  விவசாயிக்கு அஞ்சம்மாள் என்ற மனைவியும், மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.;இந்தநிலையில் தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ஆடலரசன் மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயி ராதா வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல், ஒன்றிய துணைச்செயலாளர் டி.ஜி.ராஜேந்திரன் உட்பட பலரும் உடன் இருந்தனர்.>இந்த ஆண்டின் கருகிய பயிரை கண்டு விவசாயி மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் டெல்டா மாவட்டத்தில் தொடங்கி இருப்பது அந்த கிராமத்தையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- இரா.பகத்சிங்

கருத்துகள் இல்லை: