ஞாயிறு, 28 ஜனவரி, 2018

சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகை மக்கள் கலை இலக்கிய கழகம்

தமிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது

வினவும் :தமிழை அவமதித்த சின்ன சங்கரன், விஜயேந்திரனே தமிழகத்தை விட்டு ஓடு ! என்ற முழக்கத்துடன் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், 27.01.2018 அன்று காலை 10:40 -க்கு சென்னை சேத்துப்பட்டு சங்கரமடம் முற்றுகையிடப்பட்டது.
சேத்துப்பட்டு பேருந்து நிருத்தத்தில் இருந்து பறைமுழக்கத்துடன் துவங்கிய ஊர்வலம் சங்கரமட அலுவலகத்தை நோக்கி முற்றுகையிடச் சென்றது. இதைக் கண்டு ஏற்கனவே அங்கு குவிந்திருந்த போலீசு பதறியடித்து ஓடிவந்து, போராட்டம் நடத்தக்கூடாது எனக்கூறியது. ஆனால் தடையை மீறி சங்கரமட வாயிலில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பரண்கள் முன்பு நின்று போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிகழ்விற்கு சென்னை ம.க.இ.க செயலர் தோழர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தின் முக்கிய நிகழ்வாக விஜயேந்திரனுக்கு செருப்படி பூஜை செய்யப்பட்டது. தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கைது செய்தது போலீசு. பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை – தொடர்புக்கு : 95518 69588

கருத்துகள் இல்லை: