சனி, 3 பிப்ரவரி, 2018

தலித் மாணவி தற்கொலை 2000 ரூபாய் தேர்வு கட்டணத்துக்காக அவமனபடுத்தியதால்... ஹைதராபாத்

Vijay Bhaskarvijay : 2000 ருபாய் தேர்வுக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் (ஹைதிராபாத்தில்)
பதினாலு வயது மாணவியை தேர்வு எழுத விடாமல் வெளியே அனுப்பி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
இப்போது அவள் அம்மா “நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்கிறேன். என் மகள் கிடைப்பாளா” என்கிறார். தனியார் மயம் ஆகும் கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றால் வருங்காலத்தில் பலர் இப்படி கல்வி நிலையங்களால் மருத்துமனைகளால் கொலை செய்யப்படுவார்கள்.
கல்வியும் மருத்துவமும் எப்போது அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். பணம் இல்லாமல் இருப்பதற்கும் கல்வி கற்பதற்கும், மருத்துவம் பார்ப்பதற்கும் சம்பந்தம் மிகக் குறைவாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே சமுதாயம் விளங்கும்.

இம்மாணவி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்.
அந்தக் கோணத்தில் பார்க்கும் போது இது இன்னும் முக்கியமான பிரச்சனையாகும்.
மேலே எழும்ப ஆர்வம் கொண்டு படிக்கும் இளைஞர்களை இப்படி பணமில்லை என்று ஒதுக்கி வைத்து தற்கொலைக்கு தூண்டுவது வேதனையையும் கோபத்தையும் கொடுக்கிறது..

கருத்துகள் இல்லை: