ஞாயிறு, 28 ஜனவரி, 2018

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது!

நக்கீரன் :முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார்.
தினகரன் ஆதரவாளரான செந்தில் பாலாஜி, அவரது ஆதரவாளர்கள் மூலம் கரூரில் எம்.ஜி.ஆர். விழாவை முன்னிட்டு அனுமதியின்றி சுவர்களில் விளம்பரம் செய்து வந்தார்.  போலீசார் இதை தடுத்தபோது அவர்களுடன் செந்தில்பாலாஜி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.  மறியலிலும் ஈடுபட்டார்.  இதையடுத்து செந்தில்பாலாஜியையும் அவரது ஆதரவாளர்கள் 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை: