ஞாயிறு, 23 அக்டோபர், 2011

திருட்டு மின்சாரம் (புலி TNA)கூட்டமைப்பின் களவு அம்பலம் அதிர்ச்சியில் மின்சார சபை!


திருட்டு மின்சாரம் கூட்டமைப்பின் களவு அம்பலம் அதிர்ச்சியில் மின்சார சபை!
நடந்து முடிந்த உள்ளுராட்சிச் சபைக்கான தோ்தலில் போட்டியிட்டு பருத்தித்துறைப் பிரதேச சபையின் தனது ஆளுகைக்குள் கொண்டு வந்தது தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு.அந்த வகையில் பூபாலசிங்கம் சஞ்சீவன் அதன் தவிசாளராகப் பொறுப்பேற்று தலைமை தாங்கி வருகின்றார்.
இவரது வாகனத்தின் தரிப்பிடத்திற்கான கொட்டகை அமைக்கும் பணி பிரதேசசபையின் சபை நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆயினும் இப்பணி திருட்டு மின்சாரம் பெறப்பட்டே மேற்கொள்ளப்படுகிறது. பட்டப்பகலில் சட்டத்திற்கு முரணாக மின்சாரம் திருடப்படுகிறது.சட்ட திட்டங்களை பின்பற்றி மக்களுக்கு வழிகாட்டியாக, முன்மாதிரியாக நடக்க வேண்டிவர்கள், பதவி ஏற்று மூன்று மாதத்திலேயே (புலி)கூட்டமைப்பு திருட்டு வேலையை ஆரம்பித்துள்ளனர்.
இக்கொட்டகையின் ஒப்பந்தகாரர் தவிசாளரின் தந்தையான பூபாலசிங்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: