வெள்ளி, 28 அக்டோபர், 2011

முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 21 ஆண்டுகள்

putalam-muslim
வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது இதை நினைவு கூரும் முகமாக மூன்று கருப்பொருளை கொண்டு நிகழ்சிகளை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
1. முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்குவித்தல்.
2.தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல்.
3..வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துதல்.
செய்தி :
கருப்பு ஒக்டோபர் மூன்று கருப்பொருளை மையமாக கொண்டு நினைவு கூறப்படுகின்றது
வடமாகாண முஸ்லிம்கள் வடமாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு இந்த ஒக்டோபர் மாதத்துடன் 21 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது இந்த சம்பவம் ஆண்டுதோறும் வடமாகாண முஸ்லிம்களால் நினவு கூறப்படுகின்றது. இந்த ஆண்டும் நினைவுகூறும் நிகழ்வுகள் இன்று தொடாக்கம் எதிர் வரும் 30 தாம் திகதிவரை கொழும்பு ,கண்டி, புத்தளத்தில், மன்னார் , யாழ்பாணம் ஆகிய பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ''கருப்பு ஒக்டோபர் 2011''  நிகழ்வுகளின் கருப்பொருளாக முஸ்லிம் மீள்குடியேற்றத்தை ஊக்கிவித்தல் , தமிழ் , முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் மீண்டும் புரிந்துணர்வையும் , ஒருமைப்பாட்டையும் ஊக்குவித்தல். வடமாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தின் போது மிகப்பெரிய கொள்ளை சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது அது வரலாற்றில் சரிவர பதிவு செய்யப்படவேண்டும் என்பதை வலியுறுத்துதல் ஆகியவற்றை கருப்பொருளாக கொண்டு. சொற்பொழிவு , தமிழ் , முஸ்லிம் சமூக கலந்துரையாடல் , இரத்ததானம், விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டல் ஆகிய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் போரம் மேற்கொண்டுள்ளது
இதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதுடன் , சொற்பொழிவு நிகழ்சிகள் இன்று நாளையும் புத்தளத்திலும் கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இவற்றை அஷ்ஷெய்க் எஸ் .எம் மஸாஹிம் மற்றும் அஷ்ஷெய்க் மின்ஹாஜ் ஆகியோர் நடத்தவுள்ளனர் இதை தொடர்ந்து , எதிர்வரும் ஞாயிற்று கிழமை கொழும்பில் தமிழ் , முஸ்லிம் சமூக கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏனைய நிகழ்வுகள் மற்ற குறித்த பிரதேசங்களில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் போரம் என்ற அமைப்பு கடந்த ஆண்டும் கருப்பு ஒக்டோபர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
மொஹம்மத் சர்ராஜ்
செயலாளர் -ஸ்ரீலங்கா முஸ்லிம் வாலிபர் போரம்

கருத்துகள் இல்லை: