திங்கள், 24 அக்டோபர், 2011

திருட்டுக்கதை ஷாருக்கானுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம்

அடுத்தவர் கதையை காப்பியடிப்பது வேதனைக்குரியது
: ரா-1 வழக்கில் நீதிபதி தீர்ப்பு
ஷாரூக்கான் தயாரித்து நடித்துள்ள விஞ்ஞானப்படம் ரா-1.  தீபாவளிக்கு வெளியாகும் இந்தப் படம் காப்பிரைட் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
ரா- ஒன் படத்தின் கதை தங்களுடையது என யாஷ் பட்நாயக் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மொகித் ஷா மற்றும் நீதிபதி ரோஷன் தால்வி, இந்தப் படத்தை வெளியிடும் முன், நீதிமன்றத்தில் ரூ. 1 கோடியை ஷாரூக்கான் செலுத்த வேண்டும். அதன் பிறகே வெளியிட வேண்டும். தவறினார் இடைக்காலத் தடை விதிக்க வேண்டி வரும் என்று தீர்ப்பளித்தனர்.
தீர்ப்பில் மேலும்,’திரையுலகில் அடுத்தவர் கதையை காப்பியடிப்பது தொடர் கதையாகி வருவது வேதனைக்குரியது’’என குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: