வியாழன், 27 அக்டோபர், 2011

புலிகள் பிளவுபட்டபோது ஆயுதங்கள் வேறு அணிக்கு கைமாறின-கோதபாய ராஜபக்ஷ!

தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்த ஆயுதங்களில் ஒரு தொகுதி வேறு நபர்களின் கையில் சிக்கியுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் கருணா அம்மானால் இரண்டாகப் பிரிவடையச் செய்யப்பட்ட போது புலிகளிடமிருந்த பொருந்தொகையான ஆயுதங்களை வேறொரு அணியினர் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையின் கீழ் இன்று நாடு முழுவதும் சட்ட விரோதமான முறையில் காணப்படும் ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தனது செவ்வியில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: