ஞாயிறு, 23 அக்டோபர், 2011

முக்கிய புலி உறுப்பினர்கள் 811 பேருக்கு எதிராக வழக்கு!

ஹெலிகொப்டர்கள் கடற்படைப் படகுகள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய முக்கிய புலி உறுப்பினர்கள் உள்ளிட்ட 811 பேருக்கு எதிராக வழக்கு!

ஹெலிகொப்டர்கள், கடற்படைப் படகுகள் மற்றும் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ஆறு முக்கிய புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட 811 பேருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவுள்ளதாக தவல்கள் தெவிக்கின்றன
கிளிநொச்சி, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு போன்ற புலிகளின் முக்கிய முகாம்களில் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களாக கடமையாற்றிய ஆறு பேர் இவர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் குண்டு மற்றும் கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தியவர்களும் இவர்களில் அடங்குகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: