திங்கள், 24 அக்டோபர், 2011

அக்காவை அடித்துக் கொன்றுவிட்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட தம்பி!

தெற்குப் பாணந்துறை பகுதி முங்வத்தை - அலுபோமுல்ல பிரதேசத்தில் இரு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மோதலில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.10 அளவில் இடம்பெற்றுள்ளது.
தம்பியின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்த அக்கா பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த 24 வயதுடைய கௌசல்யா ஜெயசுந்தர என்பவரது சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அக்கா உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி அடைந்த தம்பியான 22 வயதுடைய சச்சின் ஜெயசுந்தர தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவருடைய சடலமும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: