செவ்வாய், 15 ஜூன், 2010

சுரேஸ்பிரேமச்சந்திரனின் முதலமைச்சர் கனவிற்கு உலைவைக்கின்றார் வித்தியாதரன்.

எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் சுடரொளி , உதயன் ஆசிரியர் வித்தியாதரன் வட மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போவதாக கூறியுள்ளார். புலிகளின் வன்முறைகளை நெடுங்காலங்களாக நியாயப்படுத்தி வந்த இவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சுடர் ஒளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பதவியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவதற்காகவே பத்திரிகைத் துறையிலிருந்து விலகினார் என கூறப்படுகின்றது.

இது தொடர்பாக வித்தியாதரன் கொழும்பு தமிழ் இணையத்திற்கு வழங்கிய குறிப்பு ஒன்றில் அரசியலில் இறங்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தான் மேற்படி பத்திரிகைகளிலிருந்து விலகியுள்ளதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தாயாரெனில் தான் கூட்டமைப்பில் போட்டியிட தயாரெனவும் தெரிவித்துள்ளார்.

அவருடைய மேற்படி நிபந்தனை கூட்டமைப்பினுள் நெருக்கடிகளை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. முதலமைச்சர் பதவிக்கனவில் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் மண்டையன் குழுத்தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் காத்துக்கொண்டிருக்கின்றார் என்பது யாவரும் அறிந்தது. இந்நிலையில் வித்தியாதரன் பகிரங்கமாகவே தன்னை கூட்டமைப்பினர் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தவேண்டும் என அறிவித்திருப்பது கூட்டமைப்பினை சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

முதலமைச்சர் பதவிக்காக போட்டியிடவிரும்பும் வித்தியாதரனின் ஊடகங்களுக்கான கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின்போது வித்தியாதரனை தெரிவு செய்யாதவிடத்து ஆழும்கட்சியுடன் இணைந்து போட்டியிடும்போது, நான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவே விரும்பினேன், ஆனால் எனக்கு சந்தர்ப்பம் கிடைக்காதபட்சத்தில் இம்முடிவினை எடுத்துக்கொண்டேன் என தெரிவிப்பதற்கு முன்னேற்பாடாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை: