வெள்ளி, 18 ஜூன், 2010

ஜரோப்பிய நாடொன்றில் அரசில் பிரமுகராகவுள்ள தமிழ் அரசியல்வாதியொருவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல்

-காந்தரூபன்[ஜரோப்பா]
ஜரோப்பிய நாடொன்றில் அரசில் பிரமுகராகவுள்ள தமிழ் அரசியல்வாதியொருவருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக ஜரோப்பிய நாடொன்றில் அரசியல் பிரமுகராகவுள்ள மேற்படி பிரமுகருக்கு தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரமுகர் தமிழகத்தில் நடைபெறவுள்ள செம்மொழி மகாநாட்டிற்கு செல்லவிருந்த நிலையிலேயே இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இவ் அரசியல் பிரமுகர் பயங்கரவாத செயற்பாடுகளை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக விமர்சித்து வந்ததாகவும், விடுதலை போராட்டம் என்ற பெயரில் ஜரோப்பிய நாடுகளில் இடம்பெற்றுவந்த வன்முறைகளை கண்டித்து வந்ததுடன், அவற்றை கட்டுப்படுத்துவதற்காக கணிசமான பங்களிப்பை வழங்கியவர் ஆவர்.
விடுதலை புலிகள் தாயகத்தில் இருந்தபோதுதான் இவ்வாறான தொலைபேசி மிரட்டல்களும், வாய்சவாடால்களும் ஜரோப்பிய புலிகளால் மேற்கொள்ளப்பட்டபோதும், தற்போது அவர்கள் அழிக்கப்பட்டுள்ள நிலையிலும் பிழைப்புக்காக விடுதலையை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம் இன்னும் ஜனநாயக சக்திகள் தமது கருத்தை சுதந்திரமாக வெளிகாட்ட முடியாமல் பயமுறுத்தல் விடுத்து அச்சுறுத்த முனைகின்றனர்.

கருத்துகள் இல்லை: