வியாழன், 17 ஜூன், 2010

விசா மோசடி 7 இந்தியப் பிரஜைகளைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது



17.06.2010 - வியாழக்கிழமை

சுற்றுலா விசாவுடன் நாட்டிற்குள் பிரவேசித்த பின்னர் வத்தளையிலுள்ள பித்தளைத் தொழிற்சாலையொன்றில் தொழில் புரிந்துவந்த 7 இந்தியப் பிரஜைகளைக் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை சட்ட விரோதமாகத் தொழில்களில் ஈடுபட்ட 105 இந்தியப் பிரஜைகள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் திணைக்களத்தின் விசாரணை மற்றும் விமான நிலையப் பிரிவிற்குப் பொறுப்பான உதவிக் கட்டுப்பாட்டாளர் வில்லியம் தேவேந்திரராஜா தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: