வெள்ளி, 18 ஜூன், 2010

வீரப்பன் மகளுக்கு சீட் மறுத்துவிட்டது எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

வீரப்பன் மகளுக்கு சீட் தர கல்லூரி நிர்வாகம் மறுப்பு
சந்தன கடத்தல் வீரப்பனின் மூத்த மகள் வித்யா ராணி கடந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார்.  இளைய மகள் பிரபா இந்த ஆண்டு ப்ளஸ் டூ தேர்வில் வெற்றி பெற்றார்.
சென்னை அயனாவரம் பெத்தேல் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்ற வித்யாராணி 1,200க்கு 730 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இவரது தங்கை பிரபா சேலம் வேதிகாஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து  பிளஸ் 2 தேர்வில் 902 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கிய பிரபாவுக்கு கல்லூரியில் இடமில்லை என்று மறுத்துவிட்டது எஸ்.ஆர்.எம்.  பல்கலைக்கழகம்.
சென்னை எஸ்.ஆர். எம். கல்லூரியில் பொறியியல் சீட் வாங்குவதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் ஒருவர் பிராபாவை அழைத்து சென்றார்.
ஆனால் கல்லூரி நிர்வாகம் சீட் தரமுடியாது என்று மறுத்ததுடன்,  இனி இந்த பக்கமே வராதீர்கள் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: