வியாழன், 4 ஏப்ரல், 2019

தமிழச்சி தங்கபாண்டியனை குறிவைத்து தேர்தல் ஆணையம் அதிமுக பாஜக கூட்டு தாக்குதல்!

தமிழ்சமயா  : துரைமுருகன் மகன் கதிரானந்தை தொடர்ந்து தென் சென்னையில் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியன் மீது தேர்தல் ஆணையம் தனது தகிடு தத்தங்களை அரங்கேற்றி உள்ளது .
தென்சென்னை தொகுதி வேட்பாளர்களாக  அதிமுக அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தனன் போட்டி இடுகிறார்.
உலகம் அறிந்த பெரும் ஊழல் அமைச்சரின் மகனை தேர்தலில் வெற்றி பெற வைக்க தேர்தல் ஆணையம் தற்போது அவரது தொகுதியில் போட்டி இடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை குறிவைத்து தனது அதிமுக பாஜக சேவைகளை ஆரம்பித்து உள்ளது.
இரண்டு கட்சியின் வேட்பாளர்களும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்
சென்னை மேடவாக்கம் - ஆதம்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த தேர்தல் அதிகாரிகள் அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் கட்டு காட்டாக தென் சென்னை பகுதியை சேர்ந்த புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்றும் . 220 வாக்காளர் அடையாள அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டது என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது .


அதனை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதனை எடுத்து வந்தவர்கள் திமுகவினர் என்பதும், அதில் திமுக வட்டசெயலாளர் திவாகரனும் ஒருவர் என்றும் தகவல்களை பரப்புகிறது

அதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்காளர் அடையாள அட்டை எவ்வாறு கிடைத்தது என்றும், கள்ள ஓட்டு போட இதனை அவர்கள் பயன்படுத்த இருந்தார்களா என்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம் 

கருத்துகள் இல்லை: