வியாழன், 4 ஏப்ரல், 2019

ஸ்டாலின் : கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி

A Sivakumar : கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி என்று திமுக தலைவர் நேற்று அறிவித்துள்ளார்.
இதை ஒழுங்கா உழைக்கும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே போதும்.
ஓட்டுக்கு யார் பணம் கொடுத்தாலும் அதைப் பற்றி திமுக கவலைப்படவே தேவையில்லை.
தலைவர் ஸ்டாலின் செய்த அறிவிப்பால் 1 சவரன் நகை அடமானம் வைத்தவர்களுக்கு குறைந்தது சுமார் 12000 ரூபாய்க்கு தள்ளுபடி கிடைக்கும்.
நகரம் & கிராம பகுதிகளில் 90% மக்கள் கூட்டுறவு வங்கிகளில் தான் நகையை குடும்ப செலவுக்கு , விவசாய செலவிற்காக வைத்து உள்ளார்கள்.
5 சவரன் என்றால் ரூ.60000 கடன் தள்ளுபடி ஆவதோடு நகைகள் வேறு உடனே கையில் கிடைத்துவிடும்.
விவசாயிகளுக்கு பயிர்க் கடன் ரத்து
குடும்ப பெண்களுக்கு நகைக் கடன் ரத்து
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து
பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு ரத்து
அனைத்து மாணவர்களுக்கும் இலவச ரயில் பயண வசதி
என முத்து முத்தான வாக்குறுதிகள்.

கருத்துகள் இல்லை: