திங்கள், 1 ஏப்ரல், 2019

பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு: இன்று முதல் அமல்

பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு: இன்று முதல் அமல்தினத்தந்தி : பேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா, விஜயா ஆகிய வங்கிகள் இணைக்கப்படுகிறது. இதன் மூலம், நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக பேங்க் ஆப் பரோடா உருவெடுக்கிறது.
மும்பை, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல் பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு 5042 கோடி ரூபாயை மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் ஏப்ரல் ஒன்றாம் தேதியான இன்று முதல் விஜயா வங்கி, தேனா வங்கிகள், பேங்க் ஆப் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், அந்த இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் இனி, பேங்க் ஆப் பரோடா வங்கி வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்த இணைப்பு நடவடிக்கை மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்திருப்பதுடன், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கிக்கு அடுத்த நாட்டிலேயே 3-வது பெரிய வங்கியாக பேங்க் ஆப் பரோடா உருவெடுத்துள்ளது<

கருத்துகள் இல்லை: