வெள்ளி, 27 டிசம்பர், 2013

டி.ராஜேந்தர். கண்ணீர் : திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க திமுகவில் இணைந்தேன்

திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் நடிகர் விஜய டி.ராஜேந்தர், தனது மனைவி உஷா ராஜேந்தருடன் வெள்ளிக்கிழமை மாலை  சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி உடன் இருந்தார்,
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய டி.ராஜேந்திரர்,
தி.மு.க. தலைவரை பார்க்கலாம் என ஆற்காடு வீராசாமி கூப்பிட்டார். அந்த அன்பு கட்டளையை என்னால் மறுக்க முடியவில்லை. எல்லா துறையிலும் எனக்கு அவர் ஆசான். தமிழிலும், அரசியலிலும் எனக்கு அவர் குரு. அன்பு கட்டளையை என்னால் மீறமுடியவில்லை.
கட்சியில் இணைந்ததில் மிகவும் சந்தோஷம் என்றார். தலைவர் சொன்னாரு 'லட்சிய திமுகவாக இருக்கிற நீ, திமுகவின் லட்சியத்தை உயர்த்தி பிடிக்க வேண்டும்' என்றார். அதனால் திமுகவில் இணைந்தேன் என்றார்.
 சினிமா கூத்தாடிக்கு தேவை பணம் புகழ் ! எதையாவது உயர்த்தி பிடித்தால்தானே பருப்பு வேகும் , நேற்றுவரை கருணாநிதி கருணாநிதி என்று ஏகவசனத்தில் வசைபாடிய இந்த கூத்தாடி இனி ஒரே கலைஞர் பஜனை செய்வார் ,இதைதான் அரசியல் ஒரு விபசாரம் என்று சொல்வது 

கருத்துகள் இல்லை: