திங்கள், 23 டிசம்பர், 2013

தேவயானிக்கு இனி ஐ நா பதவியாம் ! ஒரு மோசமான கிரிமினலுக்கு இந்தியா வக்காலத்து

வீட்டுப் பணிப்பெண்ணுக்குச் சட்டப்படி அளிக்க வேண்டிய ஊதியத்தை அளிக்காததால், அமெரிக்காவில் கைதுசெய்யப்பட்ட இந்தியத் தூதரக அதிகாரி தேவயானி கோபர்கடே விவகாரம் இந்திய ஊடகங்களில் சமீப நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்தியாவில் 'உரிமைகளற்ற குடிமக்களாக' கருதப்படும் வீட்டுப் பணியாளர்களின் பணிப் பாதுகாப்பை அமெரிக்கச் சட்டங்கள் உறுதிசெய்கின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா போன்ற நாட்டிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இது.
அமெரிக்க சட்டத்திலிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவயானி கோப்ரகடேவை ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக இந்தியா அறிவித்துள்ளது. மேலும், தூதரக அதிகாரிக்கு வழங்கப்படுவது போன்று தேவயானிக்கு சிறப்புரிமைகள் மற்றும் சட்ட விலக்கு அளிக்க வேண்டும் என்றும் ஐ.நா. சபைக்கு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
விசா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள தேவயானி கோப்ரகடேவை அமெரிக்கச் சட்டத்திலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இதன் ஒருபகுதியாக, ஐ.நா.வுக்கான இந்திய தூதர் அசோக் முகர்ஜி, ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூனுக்கு, தேவயானி விவகாரம் தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.

அதில், தேவயானி கோப்ரகடே, ஐ.நா. சபைக்கான இந்திய அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு தூதரக அதிகாரிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் அமெரிக்கச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வளவு கேவலமான அரசியல் அதிகாரம் 

மேலும், ஐ.நா. சபையின் துணை பொதுச் செயலாளர் ஜேன் லியாசனையும் அசோக் முகர்ஜி நேரில் சந்தித்து, தேவயானி கோப்ரகடே விவகாரம் தொடர்பான இந்தியாவின் கோரிக்கையை வலியுறுத்தினார்.
இந்தியாவின் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அசோக் முகர்ஜி அளித்த பேட்டியில், தேவயானிக்கு சட்ட விலக்கு அளிப்பது தொடர்பான கோப்புகளை அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு ஐ.நா. சபை அனுப்பி வைத்திருப்பதாகவும், இனிமேல் இந்த விவகாரம் ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா இடையிலானது என்றும் கூறினார்..dinamani.com

கருத்துகள் இல்லை: