செவ்வாய், 24 டிசம்பர், 2013

100 கோடியில் சீனத் தலைவர் மாவோவின் தங்கச் சிலை பீஜிங்கில் திறப்பு! இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ?

(A close up of the statue, which took Chinese crafts master Zhang Mingjuan and 20 other craft masters eight months to finish in honor of the coming 120th anniversary of Mao’s birth on Dec 26. )
சீன மக்கள் குடியரசு என்ற அரசியல் கட்சியை தோற்றுவித்ததன் மூலம் சீனாவின் மக்கள் எழுச்சிக்கும், பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றிய தலைவர், மாவோ ஜெடாங்க். சீனாவின் தந்தை என்றழைக்கப்படும் இவர் உருவாக்கிய  சித்தாந்தங்களின்  விளைவாகவே உலகின் வலிமை மிக்க நாடுகளின் பட்டியலில் சீனாவும் பிரதான இடத்தை கைப்பற்றியுள்ளது 19-9-1976 அன்று மரணம் அடைந்த இவரது பிறந்த நாளையும், இறந்த நாளையும் சீன மக்கள் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அவரது 120-வது பிறந்த நாளை 26-9-2013 அன்று பிரமாண்டமாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளில் சீன மக்கள் குடியரசு கட்சியினர் மும்முரமாக உள்ளனர்l> இதனையொட்டி, 100 கோடி யுவான்& (100 million yuan ($16.47 million - இதுதான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்
இந்திய மதிப்புக்கு சுமார் 100 கோடி ரூபாய்) செலவில் உருவாக்கப்பட்டுள்ள மாவோ ஜெடாங்-கின் தங்கச் சிலை சீனாவின் தலைநகர் பீஜிங்கில் திறக்கப்பட்டுள்ளது. 50 கிலோ தங்கத்தால் செய்யப்பட்ட இந்த சிலை, நாற்காலியின் மீது அமர்ந்த நிலையில் மாவோ ஜெடாங் சிந்திக்கும் தோற்றத்தில் வடிவைமைக்கப்பட்டுள்ளது. (he foundation is made of white marble and weighs 6.83 tons.)
பச்சை மரகதத்தால் உருவக்கப்பட்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்ட இந்த 32 அங்குல தங்கச் சிலையை 20 பொற்கொல்லர்கள் சுமார் 8 மாதங்கள் உழைத்து உருவாக்கியுள்ளனர். விலையுயர்ந்த நவரத்தின கற்களும் இதில் பதிக்கப்பட்டுள்ளன. இந்த தங்கச் சிலை இரவு நேரத்தில் ‘தகதக’ என மின்னி காண்போரை பரவசப்படுத்துகிறது.
(A golden statue of Chairman Mao Zedong is unveiled during an art show in Shenzhen, South China’s Guangdong province,)

தற்போது ஷென்சென்னில் திறக்கப்பட்டுள்ள இந்த சிலை, அவரது பிறந்த நாள் கொண்டாட்டம் வரையில் சீனா தலைநகர் பீஜிங்கில் பொது மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கும். பின்னர், மாவோ பிறந்த ஷவோஷானில் அந்த சிலை நிரந்தரமாக வைக்கப்படும்.ilakkiyainfo.com

கருத்துகள் இல்லை: