வெள்ளி, 27 டிசம்பர், 2013

காரைக்காலில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்...அடுத்தடுத்து அக்கிரமம்


காரைக்கால்: 10 பேர் கொண்ட இரண்டு கும்பல்களால் அடுத்தடுத்து ஒரு 20 வயது இளம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியை பலாத்காரம் செய்யப்பட்ட செயல் காரைக்காலை அதிரவைத்துள்ளது. முதலில் 3 பேர் கொண்ட கும்பலால் அவர் கடத்தப்பட்டார். அக்கும்பலைச் சேர்ந்த ஒருவன் அப்பெண்ணை பலாத்காரம் செய்தான். பின்னர் அக்கும்பல் பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டது. இந்த நிலையில் 7 பேர் கொண்ட இன்னொரு கும்பல்வந்து அப்பெண்ணைக் கடத்திக் கொண்டு போனது. அந்த 7 பேரும் சேர்ந்து அப்பெண்ணை மறைவிடத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடுஞ்செயல் குறித்துப் போலீஸுக்குத் தகவல் தெரிந்து விரைந்து வந்து பெண்ணை மீட்டனர். தற்போது பத்து அயோக்கியர்களையும் போலீஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டபெண் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது தோழி ஒருவரும் டிசம்பர் 24ம் தேதி இரவு காரைக்காலுக்கு வந்துள்ளனர். தோழி தனது காதலரைப் பார்க்க வந்துள்ளார். அவருக்குத் துணையாக பாதிக்கப்பட்ட பெண் வந்துள்ளார். தோழியின் காதலனுக்கு 17 வயதுதான். இந்தப் பையன், தனது காதலி, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சைட் சீயிங் போயுள்ளான். போன இடத்தில் தோழிக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதாம். இதையடுத்து அவரும் அவரது காதலனும் அருகில் உள்ள ஒரு நண்பரின் வீ்ட்டுக்குப் போய் வருவதாக கூறியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மட்டும் தனியே இருந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை கடத்திக் கொண்டு போனது. பின்னர் அதில் ஒருவன் மட்டும் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். பின்னர் அப்பெண்ணை விட்டு விட்டுப் போய் விட்டனர். அதிர்ச்சியில் உறைந்தஅப்பெண், தனது தோழியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் முடியவில்லை. கடுமையான போராட்டத்துக்குப் பின்னர் அவரைக் கண்டுபிடித்தார். பின்னர் 3 பேரும் பாதுகாப்பான இடத்துக்குப் போயுள்ளனர். அப்போது ஏழு பேர் கொண்ட கும்பல்வந்துள்ளது அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை அங்கிருந்து கடத்திச் சென்றனர். அவரது தோழி மற்றும் காதலனை மட்டும் அடித்துப் போட்டு விட்டு விட்டனராம். பின்னர் கடத்தப்பட்ட பெண்ணை 7பேரும் பலாத்காரம் செய்துள்ளனர். அடித்து விரட்டப்பட்ட தோழியும் அவரது காதலனும் உள்ளூர் நண்பர்களின் உதவியை நாடியுள்ளனர். அனைவரும் சேர்ந்து அக்கும்பலைத் தேடிக் கண்டுபிடித்துள்ள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்குள் பெரும் மோதல் வெடித்தது. இதைப் பார்த்த உள்ளூர் மக்கள் போலீஸுக்குத்தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் வருவதைப் பார்த்த பலாத்காரக் கும்பல் தப்பி ஓடியது. அவர்களில் 3 பேர் சிக்கினர். பின்னர் அவர்கள் மூலம் கிடைத்ததகவலை வைத்து மீதமிருந்த 7 பேரையும் போலீஸார் பிடித்தனர். இன்னும் சிலரையும் போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொடும் செயலில் மொத்தம் 13 பேருக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறுகின்றனர்.அதில் 3 பேர் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பர்களாம்.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: