செவ்வாய், 3 ஜனவரி, 2012

முல்லைபெரியாறு பாரதிராஜா உண்ணாவிரதம் தமிழ் நடிகர்கள் பங்கேற்பார்களா?


Bharathiraja
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே தமிழ் இயக்குனர்கள் 8ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். இதில் பங்கேற்குமாறு நடிகர், நடிகைகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு பிரச்சனையில் மலையாள நடிகர், நடிகைகள் கேரள அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு பதிலடியாக தமிழ் திரைப்பட இயக்குனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சமீபத்தில் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்டோர் பங்கேற்றார்கள். அடுத்த கட்டமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த உண்ணாவிரதம் வரும் 8ம் தேதி முல்லைப் பெரியாறு அணை அருகில் நடக்கிறது.
இயக்குனர்கள் அனைவரும் பஸ், வேன்களில் சென்னையில் இருந்து செல்கின்றனர். உண்ணாவிரதத்தில் நடிகர்கள், பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் இயக்குனர் சங்கம் சார்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுபற்றி ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசரக் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு தியாகராய நகரில் உள்ள ஆந்திரா கிளப்பில் நடக்கிறது

கருத்துகள் இல்லை: