
தற்கொலை சம்பவம் இதுவரை
* திருச்சி மாவட்ட, ஆயுதப்படை பிரிவில், ஏட்டாக பணியாற்றியவர், ஆனந்தராஜ், 42. இவர், 2011ல், குடும்ப பிரச்னை காரணமாக, மனைவி கண் முன், துப்பாக்கியால் சுட்டு பலியானார்
* அதே ஆண்டு, சேலத்தில், கொலை, கற்பழிப்பு என, 18க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய, கைதி ஜெய்சங்கர் என்பவனை தப்பவிட்ட, ஆயுதப்படை காவலர், சின்னசாமி, 25, கோவையில், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தார்
* மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர், கருப்பாயி, 31. இவர், திருமங்கலம், பேரையூர் அருகே உள்ள, நாகனாகுளம் காவல் நிலையத்தில், போலீசாக பணியாற்றி வந்தார். தாய்மாமனும், ராணுவ வீரருமான, பெத்தணசாமியை திருமணம் செய்தார்; குழந்தை இல்லை. மன அழுத்தத்தில் இருந்த கருப்பாயி, 2015ல், இரவு பணியில் இருந்த போது, துப்பாக்கியால் சுட்டு பலியானார்
* மதுரை மாவட்டம், வாடிப்பட்டியைச் சேர்ந்தவர், கோபிநாத், 23. சென்னை புறநகர்போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்த, பரங்கிமலையில், ஆயுத கிடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.
பணிச்சுமை காரணமாக, 2016 டிசம்பரில்,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* சென்னை, மெரினா கடற்கரையில், ஜெ., நினைவிடத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, மதுரை மாவட்டம், பெருங்குடியைச் சேர்ந்த, அருண்ராஜ், 27, துப்பாக்கியால் சுட்டு பலியானார். இவரது உயிரை பறித்த தோட்டா, இன்னனும் கிடைக்கவில்லை.
* சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருந்த தஞ்சை திருவிடைமருதூரை சேர்ந்த சதீஷ்குமார், 28 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக