திங்கள், 26 மார்ச், 2018

ஸ்டெர்லைட் ... ஜெயலலிதா ‘அருளால்’ குஜராத்தில் இருந்து .... நூறு கோடி லஞ்சத்தோடு வந்த பேராபத்து

Subaguna Rajan : ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ்
அம்மா ஜெ ‘அருளால்’ குஜராத்திலிருந்தே ‘சூழலுக்கே பேராபத்து ‘ என விரட்டப்பட்டும் தமிழ்நாட்டில் சுகமாக களமிறங்கிய ‘ வேதாந்தா’ குழுமக் கம்பெனி அது. 91-96 ஆட்சியில் இறங்கி அடித்த ‘ஆட்டையில்’வந்திறங்கிய கம்பெனி. வேதாந்தாவுக்கு ஏஜென்ட் வேலை பார்த்தது முரளி மனோகர் ஜோஸி எனக் கிசு கிசு உண்டு.
2000ல் தூத்துக்குடி யூனிட்டுக்கும், தொடர்ந்து அதன் இன்னொரு யூனிட்டான டையூ டாமன் , சில்வாசா( தாத்ரா & நாகர் கா வேளி),வுக்கும் கலால் வரி தணிக்கை தொடர்பில் போயிருக்கிறேன்.அந்தத் தணிக்கை “ஆடிட் 2000” அல்லது “ Canadian Audit “ என்ற புதிய முறையில் நடந்தப்பட்டது . அதாவது அதுவரை தணிக்கை கம்பெனி கணனிகள் மற்றும் ஏடுகளில் இருக்கும் கணக்குகளைக் கொண்டு மட்டும் நடத்தப்படும் இந்த ஆடிட் 2000ல் கூடுதலாக அதன் பிரசிடென்ட் துவங்கி ஜுனியர் மேனேஜர் வரை பலரையும் ‘ நேர்காணல்’ செய்து கம்பெனி ஆபரேசன் ப்ரோபைல் உருவாக்க வேண்டும்.
கிடைத்த வாய்ப்பை விட முடியுமா? அதிலும் “ இந்துத்துவா “ ப்ராஜெக்ட் அடிப்படை நிதி தரும் மூலாதாரமான நிறுவனம் என அப்போதே ‘ பேசப்பட்டது’ . எனவே ஒரு ஒலிப்பதிவு சாதனத்தோடு ( அது அந்த ஆடிட் ல் அனுமதிக்கப்பட்டிருந்தது) களமிறங்கினேன். தூத்துக்குடியில் துணைத் தலைவர் சிக்கவில்லை, சில்வாசா போனோம். அது குஜராத்தை ஒட்டிய யூனியன் பிரதேசம்( நம்ம பாண்டிச்சேரி போல) .அங்கே இருந்த உருக்காலைதான் மூடப்பட்டு , நமக்கு ‘ நச்சாக ‘ கொடை வழங்கப்பட்டிருந்தது. அம்மையாருக்கு சுளையாக முதலில் வந்த “நூறு C” அதில்தான் எனப் பேசப்பட்டது.
நாங்கள் போன போது சில்வாசாவில் , தூத்துக்குடியில் இருந்து போகும் ‘காப்பர் பார்கள்’ அங்கே, மதிப்புக் கூட்டு பொருளுற்பத்தியில் ( wires and copper equipments)பயன்படுத்தப்பட்டு, ஏற்றுமதியானது. அதாவது நச்சு தூத்துக்குடிக்கு, லாபம் சில்வாசாவுக்கு.
அங்கு நடந்த நேர்காணல் அநேகமாக எனக்கு குஜராத் முதலீட்டியத்தின் பிரமாண்ட வெளிகுறித்த இத்தணுண்டு அறிமுகத்தை ஏற்படுத்தியது. கண்டதே மிரளும்படியானதுதான் . தமிழ்நாடு டிவிஎஸ் குழுமம் , இந்தியா சிமென்டஸ் , செட்டிநாடு சிமென்ட்ஸ் போன்றவற்றின் ப்ரொபைல்ஸ் பார்த்திருக்கிறேன். அவையெல்லாவற்றையும் வழித்துப் போட்டாலும் ஒரு வேதாந்தாவிற்கு நெருங்க முடியாது. வேதாந்தாவின் இந்தியா ஆபரேஷன்ஸ் ஜுஜுபி , இந்தியாவுக்கு வெளியே அது ஒரு கடல் .
வேதாந்தா லண்டனைத் தலைமையிடமாக கொண்ட நிறுவனம் . சர்வதேச மெட்டல் விலையை தினசரியாகத் தீர்மானிக்கும் சந்தைத் தலைமையகம் அங்கேதான்.அதன் ஆட்சியாளர்கள் வேதாந்தா. வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் உலகெங்கும் வைர,தங்க, காப்பர்,அலுமினிய எனப் பலவகைச் சுரங்கங்களைக் கொண்டுள்ளது. அதன் சுரங்கங்கள் ஆஸ்திரேலியா, ரஷ்யா,உக்ரைன், ஜோர்டான்,ஆப்பிரிக்காவின் பல நாடுகள் என எங்கெங்கும் கொண்டுள்ளது.
தூத்துக்குடிக்கு அப்போது copper ore வந்தது ஜோர்டானிலிருந்து. அந்தச் சுரங்கத்தை நடத்திய கம்பெனியில் வேதாந்தாவும் , ஜோர்டன் மன்னரும் பங்குதார்ர்கள். இதேபோல் ஒவ்வொரு ஆப்பிரிக்க நாட்டுச் சுரங்கங்களிலும் அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் கூட்டு உண்டு. இன்னும் அதிர்ச்சி வேண்டுமா என்ன?
இது வேதாந்தாவின் கதை மட்டுமல்ல. அம்பானி,அதானி உள்ளிட்ட ஒவ்வொரு குஜராத்தி பனியா( இந்து & ஜைன)பெரு முதலாளியின் கதையும்தான் . அவர்களின் பொருளாதாரம் உலகளாவியது.எப்போதும் பெரும்பாலும் இந்திய எல்லை கடந்தே இயங்குவது . இந்திய ஆட்சியாளர்கள் யார் நினைத்தாலும் அவர்களது ‘ கெண்டைக் கால் ரோமத்தைக் கூட புடுங்க முடியாது’. அதனால்தான் ‘மோடிகள் ‘ இங்கு முங்கி எங்கு வேண்டுமானாலும் எழ முடியும்.
இந்தியா ‘குஜராத்தின் காலனிதான்’. குஜராத்திகள் சர்வதேச பிரஜைகள். அதனால்தான் அவர்களின் கையாள் பிரதமர் மோடி ‘வெளிநாட்டு வங்கியிலிருந்து கறுப்புப் பணத்தைக் கொண்டு வந்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் போடப்படும்’ என்ற போது, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
சரி, இப்போது சொல்லுங்கள் ஊடகங்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தைக் காட்டவில்லை என்றவர்களே, பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். கொஞ்சம் பொறுங்கள், போராட்டம் தொடர்ந்தால் ஆளுக்கொரு strategy யோடு வருவார்கள்

கருத்துகள் இல்லை: