வெள்ளி, 21 அக்டோபர், 2011

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் மாகாண சபை தேர்தல்; முதலமைச்சர் வேட்பாளர் டக்லஸ்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்துவதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மேலதிக பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து இடம் பெற்று வருவதாகவும், அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் வடக்கில் மாகாண சபை தேர்தல் நடத்துவது தொடர்பாக கருத்துக்கள் பறிமாறப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை நிறுத்துவதற்கு தயாராகி வருதாக தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை: