சனி, 22 அக்டோபர், 2011

சரத்குமார் வாக்காளர்களுக்கு நன்றி சொல்கிறாருங்கோ

சரத்குமார் அறிக்கை அதிமுக வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு நன்றி

சென்னை: அதிமுக வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் சமக தலைவர் சரத்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சமக தலை வர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பிலும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பிலும், போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றியை அளித்தமைக்கு தமிழக மக்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தமிழகத்தில், முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்த நினைக்கும் மக்கள் நலத் திட்டங்கள் யாவும் முழுமையாக மக்க ளிடம் சென்றடைய இந்த வெற்றி நிச்சயம் முதல்வரின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் என்பது உறுதி.
இந்த மாபெரும் வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து தோழமை கட்சி தோழர்களுக்கும் சமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: