வெள்ளி, 21 அக்டோபர், 2011

காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி: சுப. வீரபாண்டியன்

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் அதிமுக புதிய கூட்டணி அமைத்துள்ளதாக திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அப்போது பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. அதில் பல இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. மேலும் பல இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்த தேர்தலிலும் திமுகவுக்கு தோல்வி தான்.
இந்த நிலையில் தோல்வி குறித்து திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் கூறியதாவது,
இந்த தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருகின்றது என்றும், இதனால் திமுகவிற்கு எதிர்காலம் இல்லை எனவும் சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை வைத்து திமுகவை தவறாக எடை போடக் கூடாது. தேர்தலில் வெற்றி தோல்வி என்பது எல்லாம் சகஜம்.
ஏனென்றால் கடந்த முறை பென்னாகரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழந்தது. அதே போல புதுச்சேரி இந்திரா நகர் தொகுதியிலும் அதிமுக டெபாசிட் இழந்தது.
எனவே, தற்போதுள்ள நிலவரத்தை வைத்து திமுகவின் எதிர்காலத்தை யாரும் தவறாக எடை போடக் கூடாது. திமுகவிற்கு நல்ல எதிர்காலம் உண்டு.
சட்டசபை தேர்தலில் அதிமுக பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சித் தேர்தலில் காவல்துறை, தேர்தல் ஆணையத்துடன் கூட்டணி வைத்துள்ளது என்றார்

கருத்துகள் இல்லை: