சனி, 22 அக்டோபர், 2011

புலிகளின் தவறுகளுக்காக பாவவிமோசனம் கேட்கும் இரா.சம்பந்தன்

வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கில் கைச்சாத்திடப்பட்ட பண்டா செல்வா ஒப்பந்தம் அமுல்படுத்தப்பட்டிருந்தால் தமிழர்களுக்கு இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட்டிருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தவறுகளுக்காக, இலங்கைத் தமிழ் மக்களை அரசாங்கம் தண்டித்துவிடக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரச்சினை தொடர்பில் பாராளுமன்றில் தற்போது நடத்தப்பட்ட விவாதத்தில் கலந்து கொண்ட போது சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் தான்  விடுதலைப் புலிகள் தவறிழைத்துள்ளார்கள் என்பதை இரா.சம்பந்தன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வழிநடத்திய காலத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் அவர்கள் காட்டிய வழியில் தவறிழைத்தது என்பதை நாம் உணரக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இனியாவது தமிழ் மக்களின் நல்வாழ்வுக்கு வழியமைப்பார்களா?

கருத்துகள் இல்லை: