வியாழன், 29 செப்டம்பர், 2011

மாலைத்தீவு சார்க் மாநாட்டுக்கு இலங்கை அதிரடிப்படை பாதுகாப்பு!

மாலைதீவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக செல்லவுள்ளனர். இலங்கை ஜனாதிபதி உட்பட பலநாட்டு அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளமையினால் அவர்களின் பாதுகாப்பு கருதியே விசேட அதிரடிப்படையினரை அனுப்பத் தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது. இது சம்பந்தமாக மோப்ப நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை: