செவ்வாய், 14 செப்டம்பர், 2010

தச்சன்தோப்புப் பகுதியில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம்

யாழ்ப்பாணம் நாவற்குழி தச்சன்தோப்புப் பகுதியில் மரம் ஒன்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் யுவதி ஒருவரின் சடலம் காணப்பட்டுள்ளது. இவரது சடலத்தை சாவகச்சேரி பொலிஸார் மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர். இதே இடத்தைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தனுஷா (வயது 19) என்னும் யுவதியே இறந்தவராவார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: