வியாழன், 16 செப்டம்பர், 2010

“முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில 90 நிமிட திரில்லர்

90 நிமிட திரில்லர் “முரண்”சேரனின் ட்ரீம் தியேட்டர்ஸ் தயாரிப்பில் வளர்ந்துவரும் படம் முரண். மிஷ்கினின் உதவியாளர் ராஜன் மாதவ் இயக்கும்இப்படத்தில் கதாநாயகன்கள் சேரன், பிரசன்னா.வித்தியாசமான கதையம்சமுள்ள படங்கள் தருபவர் மிஷ்கின். அவரைப் போலவே அவரது சிஷ்யனும் சினிமாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளார்.முரண் படத்தை மொத்தமாகவே 90 நிமிடங்கள் மட்டுமே ஓடக்கூடிய வகையில் உருவாக்கி வருகிறார் ராஜன் மாதவ். இது பற்றி அவர், “தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக 90 நிமிடங்களில் படம் முடியும் வகையில் எடுக்கிறோம். இந்தப் புதுமையை ரசிகர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.  தனிப்பட்ட இரண்டு நபர்களைச் சுற்றி நடக்கும் திரில்லரான சம்பவங்கள் தான் முரண்” என்றார்.மேலும் சேரன் மற்றும் பிரசன்னா பற்றி கூறும் போது<“சேரன் சினிமாவை நேசிக்கிறார் எனபதை விட சினிமாவைதான் சுவாசிக்கிறார்என்றே சொல்லலாம். தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள மிகச் சிறந்த இயக்குனர் அவர். பிரசன்னா எனக்கு நல்ல நண்பர். அவரை வைத்து ஒரு படமாவது இயக்கனும் என்பது எனது லட்சியமாகவே நினைத்திருந்தேன். அது எனது முதல் படத்திலேயே நிறைவேறிவிட்டது. சேரன், பிரசன்னா இருவருடன் பணியாற்றுவதில்எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார் ராஜன் மாதவ்.  

கருத்துகள் இல்லை: