வியாழன், 16 செப்டம்பர், 2010

பசில் ராஜபக்ஷ: வலிகாமம் உயர் பாதுகாப்பு பகுதியில் மீள்குடியேற்ற அனுமதி!

உயர் பாதுகாப்பு பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது.யாழில் இன்று நடைபெற்ற அபிவிருத்தி மீளாய்வு கூட்டத்தின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் உயர் பாதுகாப்புப் பகுதியான வலிகாமத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சர் அனுமதி வழங்கியதோடு, 3000 ஏக்கர் காணி பிரதேசத்தில் மிதி வெடிகளை அகற்றி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: