வெள்ளி, 17 செப்டம்பர், 2010

மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்் சித்திரவதை

வீட்டுப் பணிப்பெண்ணாக சென்ற பெண் சித்திரவதைக்குள்ளாகியுள்ளார் 
 மத்திய கிழக்கில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய பெண் ஒருவர் சித்திரவதைக்குள்ளாகி தீக்காயங்களுடன் நேற்று வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தல் வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் சந்தன சந்திரசேகர தெரிவித்தார். கட்டார் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய மதுரங்குளி கணமூலையைச் சேர்ந்த 27 வயதுடைய அப்துல் மஜீது ஹில்மியா என்பவரே இவ்வாறு தீக்காயங்களுடன் நாடு திரும்பி சிகிச்சைக்காக முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார். தான் பணிப்பெண்ணாகக் கடமையாற்றிய வீட்டில் பணியில் ஈடுபட்டிருந்த போது தன்னால் ஏற்பட்ட தவறொன்றின் காரணமாக வீட்டு எஜமானிப் பெண் தன் மீது சுடுநீர் அடங்கிய பாத்திரம் ஒன்றை வீசி தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட பெண் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். இதனாலேயே தனக்கு இந்த தீக்காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தான் கடந்த 13ம் திகதி இத்தாக்குதலுக்குள்ளானதாகவும், நேற்று முன்தினம் நாடு திரும்பியதாகவும் அப்பெண் பொலிசாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: